››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை விமானப்படை 66 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை விமானப்படை 66 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

[2017/03/02]

இலங்கை விமானப்படை தனது 66 வது ஆண்டு நிறைவை இன்று (மார்ச்.02) கொண்டாடுகிறது. இவ்வருட நிறைவையொட்டி விமானப்படை தலைமையகத்தில் பிரதான அணிவகுப்பு மரியாதை நிகழ்வு விமானப் படைத்தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்வருடாந்த நிறைவு தினத்தையொட்டி நாடு முழுவதிலும் உள்ள விமானப்படைத் தளங்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் இலங்கை விமானப்படை முகாமைத்துவ சபையின் உறுப்பினர்கள், படை அதிகாரிகள், விமானப்படை வீரர்கள், சிவில் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், இலங்கை விமானப்படையினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட மூன்று நாட்களைக் கொண்ட விஷேட கண்காட்சி நிகழ்வு ஒன்று எதிர்வரும் 3, 4 மற்றும் 5 திகதிகளில் ரத்மலான விமானப்படைத் தளத்தில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் விமான சாகசங்கள், பரசூட் சாகசங்கள், தாக்குதல் நடவடிக்கைகளின் நகல் நிகழ்வுகள், கலாச்சார மற்றும் இசை நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நவரச நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்