››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை அமெரிக்க கடற்படை அதிகாரிகள் பேச்சு

இலங்கை அமெரிக்க கடற்படை அதிகாரிகள் பேச்சு

[2017/05/17]

இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படை அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கடந்த 16 மற்றும் 17ம் திகதிகளில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இரண்டாவது முறையாகவும் இடம்பெற்றது. இலங்கை சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவின் ஏழாவது கடற்பிராந்தியத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்குமிடையில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பேச்சுவார்த்தையில் இலங்கை கடற்படையின் நடவடிக்கை பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவும் அமெரிக்காவின் ஏழாவது கடற்பிராந்திய சார்பாக கெப்டன் பிரைன் அன்டர்சன் அவர்கள் தலைமையிலான அதிதிகள் குழுவும் பங்கேற்றன.இவர்களிடையே இடம்பெற்ற சினேகா பூர்வ கலந்துரையாடலில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இதுபோன்ற பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவம் குறித்து ஆராயப்பட்டன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்