››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராஜாங்க அமைச்சர் தலைமையில் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

இராஜாங்க அமைச்சர் தலைமையில் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

[2017/06/01]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜுன், 01) இடம்பெற்றது.

குறித்த இக்கூட்டத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட மற்றும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏபிஜி. கித்சிறி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் , அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்