››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழ் பகுதியில் இலங்கை கடற்படையினரின் மருத்துவ முகாம்

யாழ் பகுதியில் இலங்கை கடற்படையினரின் மருத்துவ முகாம்

[2017/06/21]

இலங்கை கடற்படையினரால் அண்மையில் (ஜூன், 18) யாழ்பானம் அனலைதீவுப்பகுதியில் மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த இம்மருத்துவ முகாமில் இப்பகுதியில் புதிதாக குடியமர்த்தப்பட்ட சுமார் 230 குடும்பங்களை சேர்ந்த அதிகளவிலான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது மருத்துவ தேவைகளுக்கான சிகிச்சைகளை பெற்றுக்கொண்டனர்.

குறித்த இம்மருத்துவ முகாம் வட பிராந்திய கடற்படை கட்டளையாகத்தின் சமூக சேவை மண்டபத்தில் இடம்பெற்றது.

இங்கு வருகைதந்த கடுமையான மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு கடற்படை மருத்துவ குழுவினர் ஆரம்ப கட்ட மருத்துவ சிகிச்சையினை வழங்கினர். சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் சத்துணவு விநியோகம் என்பன இலங்கை திரிபோஷா நிறுவனம் மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஆகிவற்றின் அனுசரணையின் கீழ் இடம்பெற்றது.

இதேவேளை, யாழ் காங்கேசன்துறை மாவடிபுரம் மாதிரி கிராமத்தில் புதிதாக குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான மற்றுமொரு மருத்தவ சிகிச்சை கடந்த 10ம் தகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த சுமார் 215 குடும்பங்கள் பயனடைந்த்தனர்.

இலங்கை கடற்படையினர், பொதுமக்களின் நலன் கருதி இவ்வாறான பல சமூக நலன்புரி திட்டங்களை வழமையாக முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்