கடற்படையினர் குடிநீர் சுத்திகரிப்பு நிலயங்கள் நிறுவியுள்ளன
[2017/06/25]
இலங்கை கடற்படை அண்மையில் வவுனியா பிரதேச
அக்கரை-400, திரப்பனே பகுதியில் பெரிய உளுக்குலம், பயின்டிக்குளம்
மற்றும் பதவிய பேகஸ்வெவ ஆகிய பகுதிகளில் அதன் சமுக நலன் அபிவிருத்தி
திட்டங்களின் அடிப்படையில் நான்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலயங்கள்
நிறுவியுள்ளதாக கடற்படை தகவள்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பிரதேசங்களில் சிறுநீரக நோய்களிலிருந்து
பொதுமக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சிறுநீரக நோய்
தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை
நிறுவுவதற்கான நிதி அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இதன்பிரகாரம்
குறித்த நிலையங்கள் மூலம் சுமார் 2700 குடும்பங்கள் பயன்பெறவுள்ளனர்.
இதுவரை நாடு பூராகவும் 215 குடி நீர் சுத்திகரிப்பு
நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 104985 குடும்பங்கள்
மற்றும் 76520 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் சுத்தமான குடிநீரை பெற்று
வருகின்றனர்