››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

எரிபொருள் விநியோகிக்க இராணுவத்தினர் உதவி

எரிபொருள் விநியோகிக்க இராணுவத்தினர் உதவி

[2017/07/26]

காவல்துரையினர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அவர்களுடன் இணைந்து இலங்கை இராணுவத்தினர் முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியம் மற்றும் கொலன்னாவ எரிபொருள் களஞ்சிய தொகுதிக்கு பாதுகாப்பு வழங்கியதோடு இன்று ( ஜூலை, 26) காலையில் இருந்து எரிபொருள் விநியோகிப்பதற்கான உதவிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

தற்போதைய தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக அரசினால் நேற்று நள்ளிரவு எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இராணுவத்தினர் பகிஷ்கரிப்பில் ஈடுபடாது கடமையை புரியும் ஊழியர்களுடன் இணைந்து தொழிநுட்ப உதவிகளையும் வழங்கி பணிகளை மேற்கொள்கின்றனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்