››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முப்படையினரின் காட்சிக்கூடங்களுக்கு பெருந்திரளான பொதுமக்கள் வருகை

முப்படையினரின் காட்சிக்கூடங்களுக்கு பெருந்திரளான பொதுமக்கள் வருகை

[2017/07/28]

நாட்டில் திறந்த பொருளாதாரம் ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட 'எதிர்கால நோக்கு' எனும் தொனிப்பொருளில் அமைந்த கண்காட்சி ஒன்று அண்மையில் (ஜூலை, 27) ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் அரச நிறுவனங்கள் பல பங்கேற்றன. இந் நிகழ்வின் அங்குரார்ப்பன நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் அரச நிறுவனங்களினால் பல்வேறு கண்காட்சிக் கூடங்கள் நிறுவப்பட்டன. அவற்றில் முப்படை மற்றும் பொலிசாரினால் நிறுவப்பட்ட காட்சிக்கூடங்கள் பெருமளவிலான பொதுமக்களை கவர்த்திருந்தன. இதனால் பெருமளவிலான பொதுமக்கள் குறித்த காட்சிக் கூடங்களுக்கு வருகை தந்தனர். குறித்த காட்சி கூடங்களில் ஆய்வுக்கும் மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்தினால் உருவாக்கப்பட்ட பல்வேறு நவீன இராணுவத்துறை சார்ந்த உபகரணங்கள் காட்சிப்படுத்தப் பட்டன.குறித்த கண்காட்சி எதிர் வரும் சனிக்கிழமை (ஜுலை, 29) நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்