››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாடசாலை மாணவர்களுக்கு விமானப்படையினரால் கல்வி புலமைப்பரிசில்கள்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விடுதி வளாகம் பாதுகாப்பு செயலாளரினால் திறந்து வைப்பு

[2017/09/16]

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விடுதி வளாகம், பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களினால் நேற்று (செப்டெம்பர்,15) திறந்து வைக்கப்பட்டது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கான விஜயத்தின் போது இப்பல்கலைக்கழக வைத்தியசாலையினையும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதிகளையும் பாதுகாப்பு செயலாளர் வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இப்புதிய வசதிகள் இப்பல்கலைக்கழகத்தில் பயிலும் பயிலுனர் அதிகாரிகளுக்கான தங்குமிட வசதிகளை அளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த விஜயத்தின் போது செயலாளர் பல்கலைக்கழக வைத்தியசாலை மற்றும் பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதிகள் ஆராந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்