››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு படைவீரர்கள் ஒத்துழைப்பு

டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு படைவீரர்கள் ஒத்துழைப்பு

[2017/11/16]

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இப்பிராந்தியத்தில் பாரியளவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்று நாடாளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்துடன் இணைந்ததாக கடந்த 10 மற்றும் 11ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

டெங்கு நோய்த் தாக்கத்தை மட்டுப்படுத்தும் முகமாக முன்னெடுக்கப்பட்ட இத் திட்டத்தில் 50ற்கு மேற்பட்ட படை வீரர்கள் ஒத்துழைப்பை வழங்கிய அதேவேளை, சுகாதார திணைக்களங்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் தமது பங்களிப்பை வழங்கினர். இதன்போது வீடுகள், வணிக வளாகங்கள், பொது மற்றும் தனியார் நிறுவன வளாகங்கள் மதஸ்தளங்கள், பாடசாலைகள் என்பன பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்