››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

டைக்வொண்டோ சாம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை விமானப்படை அணியினர் வென்றுள்ளனர்

டைக்வொண்டோ சாம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை விமானப்படை அணியினர் வென்றுள்ளனர்

[2017/11/28]

இலங்கை விமானப்படை டைக்வோண்டோ அணியினர் கொழும்பில் இடம்பெற்ற 2017ஆம் ஆண்டுக்கான 3 வது கொரிய தூதுவர்கள் குக்விவன் கிண்ண டைக்வொண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுள்ளனர். இதற்கான ஆரம்பகட்ட போட்டிகள் இம்மாதம் (நவம்பர்) 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை கொழும்பு விளையாட்டு விடுதி வளாகத்தில் இடம்பெற்ற அதேவேளை இதன் இறுதிப்போட்டிகள் 25ம் திகதி சனிக்கிழமை சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது.

இப்போட்டியில் கலந்து கொண்ட இலங்கை விமானப்படை டைக்வோண்டோ அணியினர் 4 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்று ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியவற்றுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுள்ளதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போட்டியின் இறுதி நிகழவில், இலங்கைக்கான கொரிய தூதுவர் அதிமேதகு வொன் சாம் சாங் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்