பங்களாதேஷ் கடற்படை கப்பல் இலங்கை வருகை
[2017/12/07]
பங்களாதேஷ் கடற்படைக்குச்
சொந்தமான பிஎன்எஸ் பைஜோய் கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (டிசம்பர்,
06) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மேற்படி கப்பலை
இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றதாக கடற்படை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
எதிர் வரும் வெள்ளிக்கிழமை
நாட்டை விட்டு புறப்படவுள்ள இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள்,
புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, நல்லெண்ண
விஜயமொன்றினை மேற்கொண்டு இம்மாதம் 3ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த பிரான்ஸ்
கடற்படைக்கு சொந்தமான “ஒவேர்க்னே” கப்பல் நேற்றையதினம் நாட்டை விட்டு
புறப்பட்டுச்சென்றமை குறிப்பிடத்தக்கது. |