››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை கடற்படை வலைப்பந்து அணியினர் எமிரேட்ஸ் எயாலைன் செவென்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி

இலங்கை கடற்படை வலைப்பந்து அணியினர் எமிரேட்ஸ் எயாலைன் செவென்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்ற

[2017/12/10]

இலங்கை கடற்படை வலைப்பந்து அணியினர் அண்மையில் (டிசம்பர், 02) நடைபெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் கலந்துகொண்டு எமிரேட்ஸ் எயாலைன் செவென்ஸ் திறந்த மகளிர் வலைப்பந்து போட்டிக்கான - 2017ஆம் ஆண்டின் சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றுள்ளனர். இலங்கையில் இருந்து இப் போட்டியில் பங்கேற்ற இரு அணிகளில் 12 உறுப்பினர்களைக் கொண்ட கடற்படை அணியும் இவற்றில் ஒன்றாகும் என்பதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட கடற்படை மகளிர் வலைப்பந்து அணியினர் ஆரம்ப சுற்றுப்போட்டிகளில் தமது திரமைகளை காண்பித்ததன் மூலம் இறுதிப் போட்டிக்காக தகுதிபெற்றன. இதன் பிரகாரம் லகீ வொய்ஸ் பியுசன் அணியுடன் போட்டியிட்ட இலங்கை கடற்படை மகளிர் வலைப்பந்து அணியினர் 22-15 எனும் அடிப்படையில் புள்ளிகளை பெற்று வெற்றிஈட்டியதன் மூலம் இலங்கைக்கும் கடற்படைக்கும் புகழை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

நவம்பர் 30ஆம் திகதி முதல் டிசம்பர் 02ஆம் திகதிவரை நடைபெற்ற திறந்த மகளிர் வலைப்பந்து போட்டித் தொடரில் கலந்துகொள்ளும் வகையில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணியினர் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்