இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் சந்திப்பு
[2017/12/11]
இந்திய விமானப்படை தளபதி
எயார் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை இரு வேறு சந்தர்பங்களில்
இன்று (டிசம்பர், 11) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று
காலை இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய விமானப்படை தளபதி, பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது அவர்களுக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்கள்
இடம்பெற்றது. மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச்
சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன்.
இதேவேளை, இந்திய விமானப்படை
தளபதி எயார் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவா அவர்கள் பாதுகாப்பு செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை சந்தித்து
கலந்துரையாடினர். இச்சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. குறித்த
இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து
கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில்
நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் பாதுகாப்பு
அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டிஏஆர் ரணவக்க அவர்களும்
கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது்.
|