››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிறிஸ்மஸ் கரோல்ஸ் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

கிறிஸ்மஸ் கரோல்ஸ் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

[2017/12/15]

இலங்கை இராணுவத்தினரால் நேற்று மாலை (டிசம்பர், 14) கொழும்பு தமரைத் தடாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கிறிஸ்மஸ் கரோல்ஸ் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை, இராணுவத்தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் வரவேற்றார்.

வண்ணமயமான மாலை நிகழ்வாக இடம்பெற்ற நிகழ்வில் இராணுவத்தின் ரணவிரு ரியல் ஸ்டார் பாடகர் குழுக்கள் கிறிஸ்மஸ் கரோல் கீதங்களை இசைத்தனர். மேலும் இந்நிகழ்வில் கொழும்பு மேலதிக மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை மேல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களினால் நத்தார் தினத்தின் உண்மை தத்துவத்தை விளக்கும் நத்தார் தின செய்தி வாசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிருஸ்துவ மததலைவர்கள், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. ஷாலினி வைத்தியாரத்ன சி ரேஷ்ட இராணுவ அதிகாரிகள், சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள், மற்றும் படை வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்