இணைய பாதுகாப்பு செயல்பாட்டு மையம்
பாதுகாப்பு செயலாளரினால் திறந்துவைப்பு
[2018/02/26]
கொழும்பு புதிய விமானப்படைத்
தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள இணைய பாதுகாப்பு செயல்பாட்டு மையம்,
பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன
அவர்களினால் இன்று (26 பெப்ரவரி) திறந்து வைக்கப்பட்டது.
விமானப்படைத்
தலைமையகத்திற்கு வருகைதந்த பாதுகாப்பு செயலாளர் அவர்களை விமானப்படைத் தளபதி
எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் வரவேற்றார். மேலும் பாதுகாப்பு செயலாளர்
அவர்களுக்கு விமானப்படை வீரர்களினால் அணிவகுப்பு மரியாதை ஒன்றும்
அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் அவர்களினால் இணைய
பாதுகாப்பு செயல்பாட்டு மையம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
பின்னர் பாதுகாப்பு செயலாளர் அவர்கள், விமானப்படைத் தளபதி மற்றும் சிரேஷ்ட
விமானப்படை அதிகாரிகளுடன் இணைந்து விமானப்படைத் தலைமையகத்தைச் சுற்றி
பார்வையிட்டார்.
இப்புதிய இணைய பாதுகாப்பு
செயல்பாட்டு மையமானது 24 மணி நேரமும் செயற்படவுள்ளது. இப்பணியினை செவ்வனே
நிறைவேற்ற முப்படைகளில் உள்ள இத்துறை சார்ந்த அதிகாரிகள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் பாதுகாப்பு
அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.
|