››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினர் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த விரைவ

இராணுவத்தினர் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த விரைவு

[2018/02/27]

அண்மையில் (பெப்ரவரி, 25) இரத்தினபுரி முத்தெட்டுவ, திருவானாகெடிய பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினை அணைப்பதற்காக இலங்கை இராணுவத்தின் ஒரு குழுவினர் விரைந்து செயற்பட்டுள்ளனர். வேகமாகப் பரவும் தீயினை கட்டுப்படுத்தும் வகையில் இராணுவத்தினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இவர்கள் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதற்கமைய, ஞாயிறு பகல் குறித்த காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு இத்தீயினால் பாதிக்கபட்டுள்ளதாகவும் இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மிகவிரைவாக செயற்பட்ட மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 58 ஆவது படைப் பிரிவினர் காட்டுத்தீ மேலும் பரவாத வகையில் அதனை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன், குறித்த தீயின் மூலம் மேலும் பாதிப்புக்கள் ஏற்படாத வகையிலும் செயற்பட்டுள்ளனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்