இலங்கை விமானப்படை 67ஆவது ஆண்டு நிறைவை
கொண்டாடுகிறது
[2018/03/02]
இலங்கை விமானப்படை தனது
67ஆவது ஆண்டு நிறைவை தினத்தை இன்று (மார்ச், 02) கொண்டாடுகிறது. இவ்விஷேட
தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து விமானப்படை தளங்களுக்குமான பிரதான
நிகழ்வுகள் கொழும்பிலுள்ள இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இலங்கை
விமானப்படை தளபதி, எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் பங்கேற்புடன் இன்று
இடம்பெற்ற்றுள்ளதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விஷேட தினத்தினை
முன்னிட்டு இலங்கை விமானப்படை ஏற்பாடு செய்துள்ள “எயார் போர்ஸ் டட்டூ”
கண்காட்சி இம்மாதம் 03 ஆம் திகதிலிருந்து 05 ஆம் திகதி வரை அம்பாறை
விமானப்படை தளத்தில் இடம்பெற உள்ளது. இதன்போது, விமானம் பறக்கும் காட்சிகள்,
பரசூட் காட்சிகள், கலாச்சார, ரில் காட்சிகள், பான்ட் வாத்திய காட்சிகள்
ஆகியன இங்கு இடம்பெற உள்ளதுடன், இந்நிகழ்வினை மாலை இரண்டு மணி முதல் பதினோரு
மணிவரை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
|