அமைச்சின் ஊழியர்களுக்கான மருத்துவ முகாம்
[2018/03/08]
பாதுகாப்பு அமைச்சில்
பணிபுரியும் ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஒன்று இன்று (மார்ச்,08)
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இம்மருத்துவ முகாம் பாதுகாப்பு அமைச்சின்
சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சினது
ஊழியர்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்ட இம் மருத்துவ முகாமில் மாகாண
சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மருத்துவ நிபுணர்களளினால் மருத்துவ
பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இங்கு, தொற்றா நோய்கள், பார்வை
மற்றும் காது பராமரிப்பு, பல் / வாய்வழி சுகாதாரம், மகளிர் நோய், மன
அழுத்தம் குறைப்பு மற்றும் இசை சிகிச்சையியல் ஆகியவற்றில் நோயறிதல் உட்பட
மருத்துவ சோதனைகள் என்பன மேற்கொள்ளப்பட்டன. இரத்த மாதிரி பரிசோதனைகள்
மற்றும் பிற சோதனைகள் என்பனவும் இங்கு இடம்பெற்றதுடன் ஆரோக்கிய
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் சேவா
வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாலினி வைத்தியாரத்ன அவர்களின் தலைமையில்
இந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு
அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.
|