ஜப்பானிய பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சருடன் சந்திப்பு
[2018/03/09]
ஜப்பான் தற்பாதுகாப்பு படை அதிகாரிகளின் பிரதானி எட்மிரல்
கட்ஷுடோஷி கவனோ அவர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன்
விஜேவர்தன அவர்களை இன்று (மார்ச், 09) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது
அவர்களிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக
சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மேலும் இச்சந்திப்பினை நினைவு
கூறும்வகையில் அவர்களிடையே நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இதேவேளை, எட்மிரல் கவனோ அவர்கள் இலங்கைக்கான
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று (மார்ச், 08) வருகை தந்தமை
குறிப்பிடத்தக்கது.
|