››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“பெரேகொப்” தனது பயணத்தை நிறைவு செய்தது

“பெரேகொப்” தனது பயணத்தை நிறைவு செய்தது

[2018/04/24]

ரஷ்ய கடற்படை கப்பல் “பெரேகொப்” தனது நல்லெண்ண விஜயத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் ஞாயிற்றுகிழமை (ஏப்ரல், 22) தனது பயணத்தை நிறைவு செய்தது. குறித்த கப்பல் ஐந்து நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இம்மாதம் 18ஆம் திகதி இலங்கை வந்தடைந்தது.

இக்கப்பல் 138 மீற்றர் நீளமும், 17மீற்றர் அகலமும் கொண்டதுடன், 399 கடற்படை சிப்பாய்களை எடுத்துச்செல்லக்கூடியதாகவும் காணப்படுகிறது. மேலும், இலங்கையில் தரித்திருந்த இக்கப்பலின் சிப்பந்திகள் இரு நாட்டு கடற்படையினருக்கு மத்தியில் நிலவும் நட்புறவினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து கால்பந்தாட்டம் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்