››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிளிநொச்சி மாணவர்களுக்கு ஜூடோ விளையாட்டு பயிற்சி

கிளிநொச்சி மாணவர்களுக்கு ஜூடோ விளையாட்டு பயிற்சி

[2018/05/05]

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை கல்வியை நிறைவு செய்து விளகியோருக்கான ஜூடோ விளையாட்டு பயிற்சி நிகழ்வு கடந்த ஏப்பரல் மாதம் 26, 27 ஆம் திகதிகளில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வானது 57 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் ஆலோசனை மற்றும் வழிக்காட்டலின் கீழ் இடம் பெற்றது.

இவ் இரண்டு நாள் பயிற்சியில் 70 க்கும் அதிகமான விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டதுடன், இலங்கை இராணுவ ஜூடோ கழகத்தின் ஆலோசகரான சாஜன் டி.எஸ்.ஜி.டி.எஸ் பரகடுவ மற்றும் கோப்ரல் ஜி.எஸ்.ஏ.ஏ.வி ஷான் பந்து, மற்றும் இராணுவ மகளிர் வீராங்கனை ஷானிக்கா மற்றும் வீராங்கனை வி.ஜே.எஸ்.எச் குமாரி ஆகியோரினால் இப் பயிற்சி நடத்தப்பட்டது.

குறித்த இப் பயிற்சிக்கான ஒருன்கினப்பினை கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி திரு.மோகனதாஸ் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்