››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

காட்டுத்தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு கொண்டுவரப்பட்டது

காட்டுத்தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு கொண்டுவரப்பட்டது

[2018/05/08]

முல்லைத்தீவு, கேப்பாபிலவு காட்டுப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயானது, முல்லைத்தீவு இலங்கை இராணுவ படைவீரர்களினால் மூலம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காட்டுத்தீ தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த படையினரால் அப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

குறித்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினை வேகமாக கட்டுப்படுத்தவென முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடைமையாற்றும் 100 பேர்களைக் கொண்ட படையினர் குழுவொன்று அனுப்பப்பட்டது. இக்குழுவினரால் இக்காட்டுத்தீயினை அதே நாளில் மாலை நேரத்தில் அணைக்க முடிந்தது.

கேப்பாபிலவு காட்டுத்தீயினை கட்டுப்படுத்தியது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே கடந்த மாதம் (21), இதே காட்டில் பரவிய காட்டுத்தீ 60 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் குழுவினால் கட்டுப்படுத்தப்பட்டது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்