››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

படையினரால் நாடளாவிய ரீதியில் போர் வீரர்கள் ஞாபகார்த்த தின நிகழ்வுகள் முன்னெடுப்பு

இராஜாங்க அமைச்சரினால் “தேவாஸ் அபிமான்” வெளியீடு

[2018/05/22]

 

மூன்று வருட பூர்தியினை முன்னிட்டு பாதுகாப்பு இராஜாங்க அமச்சினால் தயாரிக்கப்பட்ட “தேவாஸ் அபிமான்” எனும் புத்தகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களால் இன்று (மே, 22) வெளியீட்டு வைக்கப்பட்டது. குறித்த இப்புத்தகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனக்களின் கடந்த மூன்று ஆண்டுகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை மற்றும் அதன் வேலைத் திட்டங்கள் தொடர்பான விளக்கங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.

இந்நிகழ்வின்போது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களான, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரி, ரணவிரு சேவா அதிகாரசபை, பாதுகாப்பு சேவைகள் கல்லூரி மற்றும் தேசிய மாணவர் சிப்பாய் படையணி ஆகிய நிறுவனங்களின் பிராதானிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் இப்புத்தகம் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர அவர்களும் வருகைதந்திருந்தார்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்