சேவா வனிதா பிரிவின் தலைவி கம்புறுபிட்டிய
அபிமன்சலவிற்கு விஜயம்
[2018/06/23]
மாத்தறை
கம்புறுபிட்டியவிலுள்ள அபிமன்சலவிற்கு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா
பிரிவின் தலைவி திருமதி. ஷாலினி வைத்தியரத்ன அவர்கள் நேற்று (ஜூன், 22)
விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மனிதாபிமான
நடவடிக்கையின்போது அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் வசிப்பதற்காக அமைக்கப்பட்டதே
அபிமன்சல எனும் இல்லமாகும்.
இவ் இல்லத்தில் வசிக்கும்
அங்கவீனமுற்ற யுத்த வீரர்களுடன் திருமதி வைத்திய ரத்ன அவர்கள் உரையாடியதுடன்,
அவர்களது சுகதுக்கங்கள் பற்றியும் விசாரித்தார்.
மேலும், இவ் இல்லத்தில்
வசிப்பவர்களின் நலன்புரி தொடர்பாகவும் அங்குள்ள அதிகாரிகளுடன்
கலந்துரையாடினார்.
|