››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொழும்பு சுப்பர்குரொஸ் 2018 நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

கொழும்பு சுப்பர்குரொஸ் 2018 நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

[2018/06/24]

இரண்டாவது கொழும்பு சுப்பர்குரொஸ் - 2018 போட்டி நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக இன்று (ஜுன், 24) கலந்து சிறப்பித்துள்ளார். வெலிசர கடற்படை ஓடுதளத்தில் இடமெற்ற இந்நிகழ்வினை இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கத்துடன் இணைந்து இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்

இந்நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் அவர்களை, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் வரவேற்றுள்ளார். இதன்போது, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. ஷாலினி வைத்தியரத்ன அவர்களும் வருகைதந்திருந்தார்.

இந்நிகழ்வில் ரேஸ் கார் சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் பலர் வருகை தந்திருந்தனர். இதன்போது, இளம் ஆர்வலர்களுக்கான விஷேட நிகழ்வும் இங்கு இடம்பெற்றது.

இப்போட்டி நிகழ்வில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான விருதுகளை பாதுகாப்பு செயலாளர் அவர்கள் வழங்கிவைத்தார். இந்நிகழ்வில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உட்பட பெருந்திரளான இரசிகர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்