சிம்பாப்வே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக
அதிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
[2018/07/03]
சிம்பாப்வே தேசிய பாதுகாப்பு
பல்கலைக்கழக அதிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி
திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஜுலை, 03) சந்தித்தனர்.
பாதுகாப்பு அமைச்சில்
இடம்பெற்ற இச்சந்திப்பில் சிம்பாப்வே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள்
குழுவினர் எயர் வைஸ் மார்ஷல் மைக்கேல் டெட்ஸானி மோயோ அவர்களின் தலைமையில்
சந்தித்துள்ளனர். அவர்களின் சர்வதேச ஆய்வு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக
இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்திருந்தபோது இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எயர் வைஸ் மார்ஷல் மைக்கேல்
டெட்ஸானி மோயோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேக
பூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அவர்களுக்கிடையே நினைவுச்சின்னங்களும்
பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் பாதுகாப்பு
அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டிஏஆர் ரணவக்க அவர்களும்
கலந்துகொண்டார்.
|