››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தாய்லாந்து அதிதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

தாய்லாந்து அதிதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2018/07/14]

வரையறுக்கப்பட்ட பேங்கொக் டொக் கம்பனி அதிதிகள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை வெள்ளிக்கிழமையன்று (ஜுலை, 13) சந்தித்தனர்.

இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களும் கலந்து கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், வைஸ் அட்மிரல் சோம்சாய் நபங்சங் அவர்களின் தலைமையிலான தாய்லாந்து அதிதிகள் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மேலும், இந்நிகழ்வினை நினைவுகூறும் வகையில் நினைவுச்சின்னநக்கலும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் கடற்படைத்த தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களும் கலந்து கொண்டார்.

வரையறுக்கப்பட்ட பேங்கொக் டொக் கம்பனியானது தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கப்பல்களை நிர்மாணிக்கும் ஒரு அரச நிறுவனமாகும்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்