››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

காட்டுத்தீ இராணுவத்தினரால் அனைப்பு

காட்டுத்தீ இராணுவத்தினரால் அனைப்பு

[2018/07/16]

அண்மையில் (ஜூலை, 13) மலைப் பிராந்திய பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீக்குகுள் அகப்பட்ட ஒரு குழுவினரை விரைந்து செயற்பட்ட இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். வங்கேடிகல ஹல்துமுள்ள மலைப்பகுதியில் பரவிய காட்டுத்தீக்குகுள் அகப்பட்டவர்களே இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இராணுவ வீரர்களின் துரித நடவடிக்கையின் காரணமாக காட்டுத்தீ மேலும் பரவாது கட்டுப்படுத்தப்பட்டதுடன், அதிக சேதங்கள் ஏற்படுவதிலிருந்தும் தடுக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையின்போது கிராம மக்களின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அண்மையில் (ஜூலை, 14) மொனராகலை மாவட்டத்தில் உள்ள முக்குலர கந்த கும்புக்கன பகுதியில் ஏற்பட்ட மற்றுமொரு காட்டுத்தீயினை இலங்கை இராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்