படையினரால் பல சிரமதான பணிகள் ஏற்பாடு
[2018/07/24]
வடக்கில் உள்ள படையினர்
அப்பிராந்தியத்தில் சமூக மைய்யப்படுத்தப்பட்ட பல்வேறு சிரமதான பணிகளை
முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைவாக அண்மையில் கிளிநொச்சி பாதுகாப்பு
படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள பெருமளவிலான படைவீரர்கள் கல்விளான் மற்றும்
கோட்டைகட்டியார் குளம் ஆகிய பிரதேசங்களில் சமூக நலத்திட்டங்களை
முன்னெடுத்தனர்.
கல்விளான் அரசினர் தமிழ்
கலவன் பாடசாலையில் பாடசாலை வளாகத்தினை சிரமதான பனியின் மூலம் சுத்தம்
செய்யும் பணிகளில் படையினர் ஈடுபட்டனர். அத்துடன் இதுபோன்ற சிரமதான முறையில்
கோட்டைகட்டியார் குளத்தின் குளக்கட்டினை சுத்தப்படுத்தும் பணிகளிலும்
ஈடுபட்டனர்.
இதேவேளை, வன்னி
பிராந்தியத்தில் மகச்சிகொடிய பிரதேசத்தில் பெருநிறுவன துறை
நன்கொடையாளர்களின் அனுசரணையுடன் முன்பள்ளி அமைக்கும் பணிகளுக்கும் படையினர்
உதவியளித்துள்ளனர்.
|