சேவா வனிதா பிரிவினால் சக்கர நாட்காலி
அன்பளிப்பு
[2018/08/31]
பாதுகாப்பு அமைச்சின் சேவா
வனிதா பிரிவின் ஏற்பாட்டில் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் உத்தியோகத்தர்
ஒருவரின் தாயாருக்கு சக்கர நாட்காலி ஒன்றினை வைபவ ரீதியாக வழங்கிவைக்கும்
நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த பயனாளி நீண்ட நாட்களாக சிரமத்துடன்
வாழ்ந்து வந்தார்.
பாதுகாப்பு அமைச்சில்
இடம்பெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் திருமதி.
ஷாலினி வைத்தியரத்ன அவர்கள் சக்கர நாட்காலியினை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
|