››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

[2018/10/21]

‘கிரி உஸ்மான் ஹாரூன் ’ எனும் இந்தோனேசிய கடற்படைக்கப்பல் நேற்று (ஒக்டோபர், 20 ) கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்தது. வருகை தந்த குறித்த இக்கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். இவ்வரவேற்பு நிகழ்வில் இந்தோனேசிய தூதரக அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

சுமார் 2300 தொன்கள் எடையுடைய இக் கப்பல் 95 மீட்டார் நீளம் மற்றும் 12.7 மீட்டார் அகலம் கொண்டதாகும்.

இலங்கையில் தரித்திருக்கும்வேளையில் இக்கப்பலிலுள்ள சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல உள்ளனர். அத்துடன், இக்கப்பல் இன்று (ஒக்டோபர், 22) நாட்டைவிட்டு புறப்பட உள்ளது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்