வடக்கு மாற்றுத்திரனாளிகள் மற்றும்
மாணவர்களுக்கு இராணுவத்தினர் உதவி
[2018/11/06]
மடு தச்சனமரதமடு
பிரதேசத்தில் வசிக்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாற்றுத்திரனாளிகளுக்கு
செயற்கை அவயவங்கள் வழங்கி வைக்கும் திட்டம் ஒன்று அண்மையில்
இராணுவத்தினாரால் முன்னெடுக்கப்பட்டது. இதற்மைய குண்டசாலை
அங்கவீனமுற்றோருக்கான மத்திய நிலையத்துடன் இணைந்து இராணுவத்தினரால்
அங்கவீனமுற்ற 16 பேருக்கு செயற்கை அவயவங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு குண்டசாலை அங்கவீனமுற்றோருக்கான மத்திய நிலையத்தினால் அளிக்கப்பட
செயற்கை கால்களின் பெறுமதி சுமார் பத்து இலட்சம் ரூபாவாகும்.
இதேநேரம், ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் 80,000 ரூபாய்
பெறுமதியான நூலகத்திற்கான புத்தகங்களை தலா ஆறு பாடசாளைகளுக்கு இலங்கை
இராணுவத்தினர் வழங்கி வைத்தனர். மேலும் அவர்களினால் அப்பிரதேசத்தில்
குறைந்த வருமானத்தை பெறும் குடும்ப உறுப்பினர்களின் 52 பிள்ளைகளுக்கு
பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
|