››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் ரயில் பாதை சீரமைப்பு

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் ரயில் பாதை சீரமைப்பு

[2018/11/07]

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மூலம் கிடைக்கப்பெற்றுவரும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் பண்டாரவெல – பதுளை புகையிரத பிரதான மார்க்கம் ஊடான ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதமாகியிருந்தது. இந்நிலையை வழமைக்கு கொண்டுவருவதற்கு இலங்கை இராணுவத்தினரால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. இதற்கமைய கினிகம ரயில் நிலையத்திற்கு அண்மையில் ரயில் தண்டவாளத்தின் மீது சரிந்து விழுந்திருந்த பாறை சிதைவுகளை இராணுவத்தினர் அகற்றுவதற்கு தமது பங்களிப்பினை வழங்கியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பண்டாரவெல வரையில் மட்டுப்பட்டிருந்த ரயில் சேவையினை வழமைக்கு கொண்டுவருவதற்கு இலங்கை இராணுவத்தினருடன் ரயில்வே ஊழியர்களும் இணைந்து செயற்பட்டனர். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில இடங்களில் சிறு அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்