கடற்படை மற்றும் விமானப்படை மல்யுத்த
வீரர்கள் தேசிய பட்டங்களை வெற்றி கொண்டனர்
[2018/12/07]
அண்மையில் தேசிய மல்யுத்த
சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்
2018 இல் கடற்படை மற்றும் விமானப்படை
மல்யுத்த வீரர்களால் பல சாம்பியன்ஷிப் பட்டங்கள் வெற்றிகொள்ளப்பட்டன.
இதற்கேற்ப இலங்கை கடற்படை வீரர்கள் 4
தங்கம், 3 வெள்ளி மற்றும்
5 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளதாக
கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டிகள் யாவும் நீர்கொழும்பு ஜெயராஜ்
பெர்னான்டோபுள்ளே உள்ளக அரங்கில் இடம்பெற்றன. இங்கு இடம்பெற்ற பெரும்பாலான
போட்டிகளிள் வெற்றியீட்டிய கடற்படை ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும்
சுவீகரித்தது. 18வது ஆண்டுகள்
தொடர்ச்சியாக இடம்பெறும் இப்போட்டி நிகழ்வில் இவ்வருடத்திற்கான
சாம்பியன்ஷிப் பட்டத்தை கடற்படைவெற்றிகொண்டுள்ளது.
இதேவேளை, இலங்கை விமானப்படை
பெண்கள் மல்யுத்த அணி 3 வது ஆண்டாக
இந்த போட்டிகளின் தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வெற்றியீட்டியுள்ளதாக ,
விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போட்டிகளில் விமானப்படை ஆண்கள் அணி
ரஇரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது. ஆடவர் அணி மூன்று தங்கம்,
4 வெள்ளி மற்றும்
3 வெண்கலப் பதக்கங்களை பெற்றுக்கொண்ட
அதேவேளை, விமானப்படை மகளிர் மல்யுத்த வீரர்கள்
5 தங்கம்,
3 வெள்ளி மற்றும்
4 வெண்கலப் பதக்கங்களை
பெற்றுக்கொண்டனர்.
|