››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு

கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு

[2018/12/24]

புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் வைபவ ரீதியாக தமது கடமைகளை இன்று (டிசம்பர், 24) பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சிற்கு வருகைதந்த கௌரவ. இராஜாங்க அமைச்சர் அவர்களை பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிரி பெர்னாண்டோ, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு படைகளில் பணிப்பாளர், ஆகியோர் வரவேற்றனர்.

மேலும், சமய வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் செலுத்தும் வகையில் இடம்பெற்ற விஷேட சமய நிகழ்வின்போது மகா சங்க நாயக்கர்கள் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் நல்லாசி வேண்டி பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.

கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் குடும்பத்தினர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் முன்னிலையில் சம்பிரதாய முறைப்படி சுப வேளையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடமைகளை பொறுப்பேற்கும் இந்த நிகழ்வில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ. திரு ஹர்ஷ டீ சில்வா, நிதி இராஜாங்க அமைச்சராக கௌரவ. இரான் விக்ரமரத்ன, கௌரவ. அமைச்சரின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்