››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ரஷ்ய கடற்படைக்கப்பல்கள் நாட்டிற்கு வருகை

ரஷ்ய கடற்படைக்கப்பல்கள் நாட்டிற்கு வருகை

[2018/12/21]

நான்கு நாள் உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் நேற்று (டிசம்பர், 20) இலங்கை வந்தடைந்தன. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த வர்யாக், அட்மிரல் பண்டேலீவ், மற்றும் போரிஸ் புடோமா ஆகிய இக்கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

187 மீட்டர் நீளம் கொண்ட “வர்யாக்” 529 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ள அதேவேளை, 162.8 மீட்டர் நீளம் கொண்ட “அட்மிரல் பண்டேலீவ்” 388 வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. அத்துடன் 161.1 மீட்டர் நீளம் கொண்ட “போரிஸ் புடோமா” 75 வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது.

மேலும், இலங்கையில் தரித்திருக்கும்வேளையில் இலங்கை கடற்படையினால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் இக்கப்பல்களிலுள்ள சிப்பந்திகள் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இக் கப்பல்கள் இம்மாதம் (டிசம்பர்) 24ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்பட உள்ளன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்