››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பிரியாவிடைபெறும் கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

பிரியாவிடைபெறும் கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2018/12/31]

பிரியாவிடைபெற்றுச் செல்லும் கடற்படை தளபதி அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் பிரியாவிடை அழைப்பினை ஏற்று இன்று (டிசம்பர், 31) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், பிரியாவிடைபெற்றுச் செல்லும் கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடலும் இடம்பெற்றன.

மேலும் இந்நிகழ்வின்போது அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களின் சேவையை பாராட்டி அமைச்சரினால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்