››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் வறிய குடும்பத்திற்கு புதிய வீடு

இராணுவத்தினரால் வறிய குடும்பத்திற்கு புதிய வீடு

[2019/01/14]

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று மாணிக்கபுரத்திலுள்ள ஒரு வறிய குடும்பத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. ஹொரண, தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளையகத்தின் நிதியுதவியுடன் கிளிநொச்சி இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இப்புதிய வீடு மாணிக்கபுர கிராமத்தில் வசிக்கும் பயனாளிக்கு வழங்கிவைக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இராணுவத்தினர் வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் ஆகியவற்றையும் வழங்கியுள்ளனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்