பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[2019/01/16]
பிரித்தானிய உயர்ஸ்தானிகர்
அதிமேதகு ஜேம்ஸ் டோரிஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன்
விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி, 16) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில்
இடம்பெற்ற இச்சந்திப்பின் போது பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் ராஜாங்க
அமைச்சர் ஆகியோரிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக
சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மேலும் இச்சந்திப்பில்
பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் இணைந்து பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய
அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
|