››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“சேர்மன்” கப்பல் கொழும்பு வருகை

“சேர்மன்” கப்பல் கொழும்பு வருகை

[2019/05/12]

இலங்கை கடற்படையினரால் கையேற்கப்பட்ட முன்னாள் அமெரிக்க கடலோர பாதுகாப்புப்படை கப்பலான “சேர்மன்” இன்று (மே,12)கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்பளிக்கப்பட்டது.

22 கடற்படை அதிகாரிகள் மற்றும் 111 கடற்படை சிப்பாய்கள் ஆகியோருடன் வருகை தந்த இக்கப்பலை வரவேற்பதற்காக இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் வருகை தந்திருந்தார். பின்னர், வருகை தந்த இக்கப்பலினை கடற்படை தளபதி சுற்றிப்பார்வையிட்டார்.

தன்னகத்தே ஆயுத மற்றும் இயந்திர வசதிகளை கொண்டுள்ள 115 மீட்டார் நீளமுடைய இக்கப்பலுக்கு எதிர் வரும் காலங்களில் ஜனாதிபதி அவர்களினால் ஆணையதிகாரம் அளிக்கப்பட்டு வைக்கப்படவுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கப்பல் இவ்வாறு இலங்கை கடற்படையில் இணைந்து கொள்ளுமாயின் அதுவே இலங்கை கடற்படையில் இடம்பெறும் மிகப்பெரிய கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கப்பல் மூலம் கடல் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது உதவிகள் வழங்குதல், மேலும் இலங்கை தீவை சுற்றியுள்ள ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகிய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்