பாதுகாப்பு அமைச்சில் ஓய்வு மற்றும்
பிரியாவிடை பெரும் உத்தியோகத்தர்கள் உட்பட அரச பரீட்ச்சைகளில் திறமைகளை
வெளிப்படுத்திய அமைச்சின் பணியாளர்களின் குழந்தைகள் கௌரவிப்பு
[2019/06/28]
பாதுகாப்பு அமைச்சில்
பணிபுரிந்து ஓய்வுபெற்று, வெளியேரிச்செல்லும் உத்தியோகத்தர்களுக்கான
பிரியாவிடை வைபவம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை உட்பட க.பொ,த
சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சையில் தமது திறமைகளை வெளிப்படுத்திய
பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளை கௌரவித்து
நேற்று (ஜூன்,27) பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற
நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ
ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து
சிறப்பித்தார்.
பாதுகாப்பு அமைச்சின்
நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின்
நிருவாக மேலதிக செயலாளர் திரு. டபள்யூ. ஏ. குலசூரிய அவர்களின் வழிகாட்டலில்
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட அவர்களின் தலைமையில்
இடம்பெற்றது.
|