பாதுகாப்பு செயலாளர் “ரச மொஹத” நிகழ்வில்
கலந்து சிறப்பிப்பு
[2019/07/15]
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்
எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி
என்டிசி மற்றும் சேவா வனிதா பிரிவு தலைவி திருமதி. சோனியா கோட்டகொட ஆகியோர்
இணைந்து அத்திடியவிலுள்ள அங்கவீனமுற்ற போர் வீரர்களை பராமரித்து
குணப்படுத்தும் மிஹிந்து செத் மெதுற இல்லத்தில் நேற்று (ஜூலை, 14)
இடம்பெற்ற “ரச மோஹோத’' நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
அங்கவீனமுற்ற போர் வீரர்களை
பராமரித்து குணப்படுத்தும் இல்லமான மிஹிந்து செத் மெதுறவில் பதிவு
செய்யப்பட்டு தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான
'ரச மோஹோத' இசை நிகழ்ச்சியின் ஒரு பகுதி ஞாயற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.
மேலும், இந்நிகழ்வினை நினைவு
கூறும் வகையில் இப்பராமரிப்பு இல்லத்திலுள்ள வீரரால் தயாரிக்கப்பட்ட விஷேட
நினைவுச் சின்னம் ஒன்றும் செயலாளர் அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பணிப்பாளர்
மற்றும் அதிகாரிகள் உட்பட மிஹிந்து செத் மெதுற இல்ல அங்கவீனமுற்ற போர்
வீரர்களும் கலந்துகொண்டனர்.
|