சீனா-இலங்கை நாடுகள் ஒன்றிணைந்து
உருவாக்கும் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் பாதுகாப்பு விவகாரங்கள்
தொடர்பான 3 வது சுற்று கலந்துரையாடல்
[2019/07/25]
சீனா-இலங்கை நாடுகள்
ஒன்றிணைந்து உருவாக்கும் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் பாதுகாப்பு
விவகாரங்கள் தொடர்பான 3 வது சுற்று கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்பு
செயலாளர்
ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ
யுஎஸ்பி என்டிசி அவர்கள் கலந்து கொண்டார்.
அத்துடன் இந்நிகழ்வில் சீன
தூதுவர் அதிமேதகு திரு. சென் சுயியுவான் அவர்கள் கலந்து கொண்டார்.
சீன தூதுக்குழுவிற்கு
வெளியுறவு அமைச்சின் வெளி பாதுகாப்பு விவகார திணைக்களத்தின் பணிப்பாளர்
நாயகம் திரு லியு ஷாஒபின் அவர்கள் தலைமை தாங்கினார்.
மேலும் இச்சந்திப்பில்
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு),
இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள்,சீன தூதரக அதிகாரிகள், சிரேஷ்ட அரச
அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
|