இந்திய – இலங்கை இராணுவங்களின் ‘ மித்ரா சக்தி’ கூட்டுப் பயிற்சி இன்று
ஆரம்பம்
[2016/10/24]
மித்ரா சக்தி’என அழைக்கப்படும் இந்திய – இலங்கை
இராணுவங்களின் கூட்டுப் பயிற்சி நான்காவது முறையாகவும் இலங்கை இராணுவத்தின்
சிங்க ரெஜிமென்ட் படைப்பிரிவு தலைமையகத்தில் இன்று (ஒக்.24)
ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்பிராகாரம், குறித்த இக் கூட்டுப் பயிற்சியில்
பங்குபற்றும் வகையில் இந்திய இராணுவத்தின் 6 அதிகாரிகள் உட்பட 45 படை
வீரர்களும் நேற்று(ஒக்.23) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை
வந்தடைந்தனர்.
வருடாந்த கூட்டுப்பயிற்சியின் நான்காவது கட்டம்
நடைபெறுகின்ற ‘மித்திர சக்தி’ நாடுகடந்த பயங்கரவாதம், இணைந்து செயலாற்றும்
திறன்கள், கூட்டு தந்திரோபாய நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இரு
தரப்பினரின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளல் போன்ற விடயங்களை விருத்தி
செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
இதுவரை இக்கூட்டுப் பயிற்சி இந்தியாவில் இரு தடவைகளும்
இலங்கை கொமாண்டோவின் குடா ஓயாபயிற்சி கல்லூரியில் ஒரு தடவையும் நடை பெற்றமை
குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பான
செய்திகளுக்கு>>
|