4வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் –
2017 போட்டியில் இலங்கை விமானப்படை கராட்டி வீரர்கள் வெற்றி
[2017/08/11]
கொழும்பில் இடம்பெற்ற 4வது
தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் – 2017 போட்டியில் கலந்துகொண்ட இலங்கை
விமானப்படை கராட்டி வீரர் ஒவரோல் சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றுள்ளதாக
விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவ்வீரர் ஆண்கள் மற்றும்
பெண்கள் ஆகிய இரு பிரிவுகளுக்குமான குறித்த பட்டத்தை வென்றுள்ளனர்.
இப்போட்டி இம்மாதம் 04ம்
திகதி முதல் 06ம் திகதிவரை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றமை
குறிப்பிடத்தக்கது. இதன்போது விமானப்படையின் கராத்தே வீரர்கள் 01 தங்கம்,
08 வெள்ளி, மற்றும் 01 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. |