அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் கொழும்புத்
துறைமுகத்தில்
[2017/11/15]
ரோயல் அவுஸ்திரேலிய
கடற்படைக்கப்பல் (எச் எம் ஏ எஸ்) “நியூகேஸில்” நான்குநாள் நல்லெண்ண
விஜமொன்றை மேற்கொண்டு நேற்று (நவம்பர், 14) கொழும்பு துறைமுகத்தை
வந்தடைந்துள்ளது. வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை
மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளதாக கடற்படை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
138. 1மீட்டர் நீளம் மற்றும்
14.3 மீட்டர் அகலம் கொண்ட குறித்த கப்பலில் 184 சிப்பந்திகள்
வருகைதந்துள்ளனர். மேலும், இங்கு தரித்திருக்கவுள்ள இக்கப்பல்களின்
சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில்
பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை, குறித்த கப்பல் இம்மாதம் 17ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
|