தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில்
சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில்கள்
[2017/11/17]
2017ஆம் ஆண்டு தரம் ஐந்து
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஹோமாகம பனாகொடை இராணுவ கனிஷ்ட
பாடசாலையைச் சேர்ந்த 34 மாணவர்களுக்கு பணப்பரிசு வழங்கி வைக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட இந்நிகழ்வு
பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவம்பர், 17) இடம்பெற்றது.
ரூபா. 170,000.00
பெறுமதியான பணத்தொகை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாலினி வைத்தியரத்ன
அவர்களினால் பாடசாலையின் ஆசிரியர் பிரதிநிதி திரு. டபிள்யூபி ரஞ்சித் குமார
அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
|