››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அமைதி காக்கும் படை நடவடிக்கைகள் பயிற்சி நிறுவன கட்டளைத்தளபதிகளின் 9 வது ஆசிய-பசுபிக் மாநாடு வெற்றிகரமாக நிறைவு.

அமைதி காக்கும் படை நடவடிக்கைகள் பயிற்சி நிறுவன கட்டளைத்தளபதிகளின் 9 வது ஆசிய-பசுபிக் மாநாடு வெற்றிகரமாக நிறைவு.

 [2017/08/04]

ஆசிய-பசிபிக் அமைதி காக்கும் படை நடவடிக்கைகள் பயிற்சி நிலையங்களது கட்டளைத்தளபதிகளின் மாநாடு வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இம்மாநாடு கடந்த செவ்வாய் கிழமை தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பானது. இம்மாநாடு ‘அதிகரித்துவரும் வலுவான அமைதிகாக்கும் மனோநிலையின் சவால்கள்’ எனும் தொனிப்பொருளில் இலங்கை இராணுவ அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் பங்களிப்புடன் இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று நாட்கள் இடம்பெற்ற இம்மாநாட்டின் போது, ஆசிய-பசிபிக் அமைதி காக்கும் படை நடவடிக்கைகள் பயிற்சி நிலையங்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும் இடம்பெற்றது. இதன்போது ஆசியா பசிபிக் பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அவுஸ்ரேலியா, பங்களாதேசம், புருனை, கம்போடியா, சீனா, பிஜி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மங்கோலியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், கொரியா, தாய்லாந்து, வியட்னாம், நியூசிலாந்து, மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில், பூகோள சமாதான நடவடிக்கை தோற்றம், பங்களாதேச சமாதான ஒத்துழைப்பு பயிற்சி நிறுவனம், இலங்கை இராணுவ அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனம், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நிறுவனம் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இம் மாநாட்டின் நிறைவு நிகழ்வில் இராணுவ பதவிநிலை அதிகாரிகளின் பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்