அகுறேகொட பாதுகாப்பு தலைமையக நிர்மாணப்பணிகள் பாதுகாப்பு செயலாளரால்
மேற்பார்வை
[2017/08/15]
பத்தரமுல்ல அகுறேகொட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும்
பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதியின் முன்னேற்ற செயற்பாடுகளை
மேற்பார்வையிடும் வகையில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.
கபில வைத்தியரத்தன அவர்கள் நேற்று (ஆகஸ்ட், 14) விஜயமொன்றினை
மேற்கொண்டிருந்தார்.
இதன்போது செயலாளர் அவர்கள் கட்டுமானப் பணிகளின்
முன்னேற்றம் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்
சேனநாயக, இராணுவ பிரதம பிரதானி, மேஜர் ஜெனரல் அமால் கருனாசேகர, கடற்படை
பிரதம பிரதானி, ரியர் எட்மிரல் எஸ் எஸ் ரணசிங்க மற்றும் முப்படையின்
சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
|