இந்தோனேசிய கடற்படை கப்பல் இலங்கை வருகை
நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இந்தோனேசியாவின் கடற்படை
கப்பல் “க்ரி பங் டோமோ” நேற்று (ஒக்டோபர், 19) இலங்கை வந்தடைந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர்
கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளதாக கடற்படை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
மேலும், மூன்று நாட்கள் தரித்திருக்கவுள்ள இக்கப்பலின்
சிப்பந்திகள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு
நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த கப்பல் இம்மாதம் (ஒக்டோபர்) 21ஆம் திகதி
புறப்படவுள்ளதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
|